தமிழக மக்கள் மோடியின் பக்கம் தான் இருக்கின்றனர். சில அரசியல் கட்சிகள் தான் பிரதமருக்கு எதிராக செயல்படுகின்றன என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் 128வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழக மக்கள் மோடியோடு இருக்கிறார்கள். வேண்டுமென்றே சில அமைப்புகள் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்தும், பலூனை பறக்கவிட்டும் தமிழகத்தில் சில அநாகரிகமான செயல்களை அவர்கள் முன்நிறுத்தினார்கள். ஆனால் பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எஸ்.சி/எஸ்.டி சட்டத்தை நீர்த்து போக செய்யக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் பாஜகவும் வாதாடி வருகிறது. ஆனால் வேண்டுமென்றே சிலர் அரசியல் காரணங்களுக்காக எஸ்.சி/எஸ்.டி சட்டத்தை நீர்த்து போக செய்வது பாஜக என்பது போல் தகவலை தவறாக முன்நிறுத்துகிறார்கள். எந்த விதத்திலும் எஸ்.சி/எஸ்.டி சட்டம் நீர்த்து போகக் கூடாது என்பதில் பாஜக ஆட்சி தெளிவாக உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments