Advertisment

அவதூறு கருத்து பதிவிட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!

Tamil Party leader arrested for posting defamatory remarks

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவத்தில், முக்கிய தலைவர்களை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பிபின் ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரான விராலிமலையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்ததாகக் கூறியுள்ளார்.

Advertisment

அந்த புகாரின் அடிப்படையில் பாலசுப்பிரமணியன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை அதிரடியாக கைது செய்தனர்.

nilgiris coonoor Helicopter crash police Naam Tamilar Katchi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe