Skip to main content

தமிழக ஊர்தி நிராகரிப்பு... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முகமூடி அணிந்து பேரணி!

Published on 26/01/2022 | Edited on 26/01/2022

 

Tamil Nadu vehicle rejection ... Indian Democratic Youth Association rally wearing a mask!

 

சிதம்பரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள் ஆகியோர் உருவம் பொறித்த ஊர்தியை அனுமதிக்காததைக் கண்டித்து மேலவீதி கஞ்சித்தொட்டி முனையிலிருந்து அண்ணா சிலை வரை சுதந்திரப் போராட்ட வீரர்களின் முக உருவம் பொறித்த முகமூடியை அணிந்து மேலவீதி பெரியார் சிலையிலிருந்து அண்ணா சிலைவரை ஊர்வலமாகச் சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரவேல், வாலிபர் சங்க கீரப்பாளையம் ஒன்றிய தலைவர் சதிஷ் , சிதம்பரம் நகர செயலாளர் கோபால், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கவியரசன், மாவட்ட குழு உறுப்பினர் பிரதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் லெனின், துணைத்தலைவர் ஆகாஷ் பரங்கிப்பேட்டை ஒன்றிய பொருளாளர் அருள்தீபன், கீரப்பாளையம் ஒன்றிய பொருளாளர் சூர்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.

 

struggle

 

முன்னதாக கஞ்சித் தொட்டி முனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார் கட்சியின் மூத்த உறுப்பினர் மூசா, நகர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்