Skip to main content

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம்  வேண்டும்- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

நம்பிக்கையூட்டும் எதிர்காலத்திற்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கை அறிக்கையில்,

 

 Tamil Nadu Teachers Union demands change in 10th and 12th Class Elections


10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடத்திட்டங்கள் மாற்றியமைத்தது இந்திய அளவில் தரமான கல்விக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம் என்றால் அது மிகையாகாது. ஆனால் கேள்விமுறை பழைய முறையில் ஒரு மதிப்பெண், இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிப்பது அதேபோன்றே ஐந்தாண்டுகள் வரை நீட்டிப்பது போன்றவைகள் தவிர்க்கப்படவேண்டும். டி.ஆர்.பி, டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்டப் போட்டித்தேர்வுகள் போன்று வினாக்கள் அமைத்திடவேண்டும். அப்போதுதான் மாணவர்கள் படிக்கின்றபோதே போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளமுடியும். மாணவர்கள் எளிதாகவும் ஆர்வத்துடனும் படிக்கமுடியும். 

 

 Tamil Nadu Teachers Union demands change in 10th and 12th Class Elections


தேர்வு எப்போது முடியும் என்று எதிர்பார்ப்பதைவிட எப்போது தொடங்கும் என்ற ஆவலைத் தூண்டிட வேண்டும். தற்போது புதிய பாடத்திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு  மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டார்கள். தற்போது கரோனா வைரஸ் பரவலுள்ள இந்நிலையில், தேர்வு எப்போது என்பது நிலைத்தத்தன்மை இல்லாதது போன்ற குழப்பங்களில், தேர்வை சந்திக்க தயாராவது அதற்காக உளவியல் ரீதியாக மனதை தயார்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. அதே நேரத்தில் மன உளைச்சல் ஏற்படாமல் இருப்பதிலும் கவனமாக இருக்கவேண்டும். 10 ஆம் வகுப்பு வினாத்தாள் மாற்றியமைக்கப்படும்போது, அது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்துகாட்டாக 100 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாள் தயாரிக்கும்போது, 60 மதிப்பெண்களுக்கு, ஒரு மதிப்பெண் (சரியானவிடை தேர்வு) வினாக்களும், OMR தாள் மூலமாக வைக்கப்படவேண்டும்.
 

nakkheeran app



30 மதிப்பெண்களுக்கு 5 மதிப்பெண் வினாக்களை எழுத்து முறையில் வைக்க வேண்டும்.  மீதமுள்ள  10 மதிப்பெண் மாணவனின் மதிப்பீடு குறித்ததாக இருக்கவேண்டும், அதாவது மாணவனின் ஒழுக்கம், ஈடுபாடு, பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொது சுகாதாரம் உள்ளிட்டவை அடிப்படையில் அமைந்திடவேண்டும். இம்முறையில் வினாத்தாள் அமையும்போது மாணவர்களின் ஒழுக்கம், சமூகம் சார்ந்த பார்வைகள் மேம்படும். படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும். மேலும் வினாத்தாள் திருத்துவதும் ஆன்லைன் மூலம் திருத்துவதால் காலம் விரையம் ஆகாது. குறிப்பாக வெளிப்படைத் தன்மையும், நம்பகத்தன்மையும் கூடும். இது சாதாரண சூழலுக்கு மட்டுமின்றி, அசாதாரண சூழலுக்கும் ஏற்றதாக அமையும். வினாத்தாள் முறை மாற்றம் மூலம் மாணவர்கள் படிப்பினை உறுதிசெய்வதோடு பள்ளிக்கு வரும் எண்ணம் அதிகரிக்கும். இடைநிற்றல் அதிகரிக்காது. கல்வியும்  நம்பிக்கை ஊட்டுவதாக அமையும் எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.