Skip to main content

கோட்டை முற்றுகை போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முடிவு

Published on 26/04/2018 | Edited on 26/04/2018
mutrukai

 

ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள கோட்டை முற்றுகை போராட்டத்தில் சங்கத்தின் சார்பில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முடிவு எடுத்துள்ளது.

 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அவசர செயற்குழுக்கூட்டம்  புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்டத்தலைவர் சி.முத்துச்சாமி தலைமையில் நடந்தது. மாவட்ட மகளிரணி தலைவி நாகலெட்சுமி , மாநில சட்ட ஆலோசகர் ராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி மாவட்டத்தலைவர் நாடிமுத்து, கல்வி மாவட்ட செயலர்கள் செந்தில்குமார், தனபால்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்  ஆ.மணிகண்டன், மாநிலத் துணைத்தலைவர் பன்னீர் செல்வம்  முற்றுகை போராட்டத்தினை மாநில அமைப்பு முன்னெடுத்துள்ளதன் காரணம்  குறித்து விளக்கவுரையாற்றினர். 
மாவட்ட செயலாளர் ராஜாங்கம் அனைவரையும் வரவேற்றார்.

 

அமைப்புச்செயலாளர் முத்துக்குமார் வேலை அறிக்கையை முன் வைத்தார். 
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் தீர்மானங்களை  முன்மொழிந்தார்,
பல கட்ட போராட்டங்களை அறிவித்து நீதி மன்றம் அறிவுறுத்திய பின்பும் போராடுபவர்களை அழைத்து பேசாத தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,  ஜாக்டோ ஜியோவின் மாநில அமைப்பின் தீர்மானத்தின்படி சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் மே மாதம் 8 ந்தேதி சென்னையில் நடக்கும் கோட்டை முற்றுகை  போராட்டத்தில் கலந்துகொள்வது ,
வரும் கல்வி ஆண்டு முதல் மதிய உணவின்றி வளரும் பருவத்தில் பட்டினியோடு மாணவர்கள் கல்வி கற்கும் நிலையை போக்கும் வகையில் பத்தாம் வகுப்பு வரை வழங்கப்படும்  சத்துணவுத்திட்டத்தை  மேல்நிலை வகுப்புகளான பதினொன்றாம் வகுப்பு மற்றும்  பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி வழங்கிட அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும்,
மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையை வண்ணம் மாற்றி அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு, அனைத்து மாணவர்களுக்கும் உரிய அளவுகளுடன் அவர்களே தைத்து கொள்ள வழிவகை செய்வதோடு, 1 ஆம் வகுப்பு முதல்  12 வகுப்பு வரை அனைவருக்கும் விலையில்லாமல் வழங்கிட வேண்டும் .


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடவும் , ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி நடந்த போராட்டங்களை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசும் , மாநில அரசும் செய்திட வேண்டும்.
ஆண்டுதோறும் பணி நிரவலை நடத்தி ஆசிரியர்களை அலைகழிக்காமல் இந்தாண்டு  கைவிட வேண்டும், மேலும் தொடக்கக்கல்வி  மற்றும் பள்ளிக்கல்வி அலகுகளில்  புதிய நியமனங்களை செய்வதோடு, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை மூடுவதையும் அரசு கைவிட வேண்டும்.  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

முன்னதாக  மாநில செயற்குழு உறுப்பினர்  முகேஷ், மாவட்டத்துணைத்தலைவர் தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் , கல்வி மாவட்ட செய்தி தொடர்பாளர் மாரீஸ்வரன் , மாவட்ட பொறுப்பாளர்கள் முருகராஜ், தவமணி ஜோதிபாசு, பால்ராஜ், கருணாகரன் , பாபு சிவராம்,பழனிசாமி  உள்ளிட்ட ஆசிரியர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினர்.   இறுதியாக பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கல்வித்துறையில் மற்றொரு சாதனை; தனியார் பள்ளியின் புதிய முயற்சி!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Private school's introduced AI teacher in kerala

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும் திறம்படவும் செய்து முடிக்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 

அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில்  தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிக்காக ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஐரிஸ்’ (IRIS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஆசிரியர், பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. 

3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் திறன் கொண்ட இந்த ரோபோவின் கால்களுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்கள் மூலம், ரோபோ ஆசிரியர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்ல முடியும். இந்த ரோபோவை ‘மேக்கர்ஸ் லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.