தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் வியாசர்பாடி, எம்.ஜி.ஆர். நகரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னை வியாசர்பாடியில் நடைபெற்றது. இதில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய நலத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.