Advertisment

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டம்! நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! 

Tamil Nadu Primary School Teachers Meeting! Resolutions passed!

Advertisment

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர கூட்டமானது திருச்சி உள்ள ஒரு தனியார் மினி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளரும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைப் பொதுச் செயலாளருமான ரெங்கராஜன் தலைமை ஏற்றார். திருவாரூர் மாவட்ட செயலாளர் ஈவேரா, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சென்னை மாநகராட்சி செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை கலைக்கப்பட்டு புதிய அமைப்பு குழு பொறுப்பாளராக மாவட்ட தலைவராக ஜி முரளி, மாவட்ட செயலாளராக செல்வகுமார், மாவட்ட பொருளாளராக விவேகானந்தன் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்களுக்கு வழி காட்டுவதற்காக வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டு அந்த குழுவில் ஆல்பர்ட் சகாயராஜ், சுப்பிரமணியன், பத்மநாபன் நியமிக்கப்பட்டார்கள். இந்த கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

teachers trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe