Skip to main content

கேரளாவை அலறவிட்ட கொள்ளையர்கள்; தமிழக காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Tamil Nadu police arrested the robbers in Kerala

 

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டறை சுரேஷ் (30). தூத்துக்குடியின் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்தவர் எட்வின்ராஜ் (34). இருவரும் கூட்டாளிகள். இவர்கள் இருவரும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பைக் ஒன்றை திருடியுள்ளனராம். பின்னர், பாரிப்பள்ளியிலுள்ள வீட்டை உடைத்து ஏழரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், சாத்தனூர் காவல் நிலையம் அருகே உள்ள கனகமந்திரிலிருக்கும் ஷியாம்ராஜ் என்பவரின் வீட்டை உடைத்து அலமாரியிலிருந்த ரூ. 3.75 லட்சம் மற்றும் மூன்றரை பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாம்.

 

ஷ்யாம்ராஜ் தன் மனைவி பணிபுரியும் இடத்திலிருந்து வீடு திரும்பும் போது வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமாகக் காணப்பட்ட இருவரை புகைப்படமெடுத்துள்ளளார். மேலும், அவர் வீடு வந்து பார்த்ததில் வீட்டின் முன் ஒருவர் பைக்கில் செல்வதையும், மற்றொருவர் வீடு முன்னே உள்ள பார்க்கிங்கில் நடந்து செல்வதைப் பார்த்தவர், யார் என்று அவர்களைக் கேட்க, அவர்களோ தண்ணீர் குடிக்க வந்ததாகச் சொல்லியிருக்கின்றனர். மேலும், அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடப்பதால் அத்தொழிலாளர்கள் என நினைத்து சந்தேகப்படவில்லையாம். ஆனால், அதன் பிறகே தனது வீடு கோடாரியால் உடைக்கப்பட்டு கட்டுமான நிறுவனப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு பதறியவர் ஆதாரத்துடன் புகார் கொடுத்திருக்கிறார்.

 

Tamil Nadu police arrested the robbers in Kerala

 

இதையடுத்து, அப்பகுதியில் கவிதா என்பவரின் வீடும் உடைக்கப்பட்டு அலமாரியிலிருந்த ஏழரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. தவிர அங்குள்ள இரண்டு நாய்கள் மயங்கிக் கிடந்ததால் அவைகளுக்கு உணவில் மயக்கமருந்து கொடுத்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கேரள போலீசார் சந்தேகித்தனர்.

 

இதைத்தொடர்ந்து, சிக்காமல் போன கொள்ளையர்கள் தமிழகம் தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சி.சி.டி.வி. ஆதாரம் மற்றும் புகைப்படங்களை தமிழகப் போலீசாருக்கு கேரள போலீசார் அனுப்பி உஷார் படுத்தியிருக்கிறார்கள். இதனிடையே, தென்காசி மாவட்டத்தின் கேரள எல்லையான புளியரை எல்லையில் எஸ்.ஐ. வெள்ளத்துரை மற்றும் மாரிராஜ், பொன்ராஜ் உள்ளிட்ட போலீசார் பைக் மற்றும் பேருந்துகளைத் தீவிரமாகச் சோதனை நடத்தினர். அதே சமயம் இருவரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் பொருட்டு கொல்லம் – தென்காசி பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.

 

நேற்று மாலை 4 மணியளவில் வந்த அந்தப் பேருந்தைச் சோதனையிட்டனர். அது சமயம் பயணிகளோடு பயணிகளாக இருந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 350 ரூபாய், 36 கிராம் தங்க நகை, 178 கிராம் கவரிங் நகை மற்றும் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கத்தி, கடப்பாரை, கம்பி போன்றவைகளைப் பறிமுதல் செய்து அவர்களையும் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.