தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் இந்திய தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழக தலைவர் பேராசிரியர் அசுதோஸ் சர்மா சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சோ. ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.