தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்; 1000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு!

Tamil Nadu Muslim Progressive Party members struggle

தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக்கழகம் திருச்சி மண்டலம் சார்பாக டிசம்பர் 06 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் வழிபாட்டுத்தலங்கள்,வக்புசொத்துக்கள் பாதுகாப்புக்காக மாபெரும் மக்கள் திரள்ஆர்பாட்டம்பாலக்கரையில்துணைபொதுசெயலாளர் தஞ்சை பாதுஷா தலைமையில் நடைபெற்றது. திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா வரவேற்றார்.

திருச்சி மேற்கு மாவட்ட தலைவர்கவுன்சிலர்பைஸ்அஹமது, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அப்துல் கனி, பெரம்பலூர் மாவட்ட தலைவர்குதரதுல்லா, கரூர் மாவட்ட தலைவர்சாகுல்அமீதுமற்றும் அரியலூர் மாவட்ட தலைவர்சாகுல்ஹமீதுஆகியோர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாநில துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டலசெயலாளர்கள், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமுமுகதலைமை கழக பேச்சாளர் கோவைசையது, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , தலைமை பிரதிநிதிகள்நூர்தீன்,ஜெய்னுலாபுதீன்,தாஹிர்பாஷா, ஐ.பி.பி. மாநில துணை செயலாளர் முகமது ரபீக்ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில் மேற்கு மாவட்ட செயலாளர்இப்ராஹிம்ஷா நன்றி கூறினார்.

இப்போராட்டத்தில்மமகமாவட்டசெயலாளர்இப்ராஹிம், மாவட்ட பொருளாளர்ஹுமாயூன்கபீர், மாவட்டதுணைதலைவர் மணவை அக்பர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல்சமது,ஹுமாயூன்கபீர், அப்துல் ரஹீம், இம்ரான், அப்துல்சமது,அசாருதீன், மாவட்டதொண்டரணி, இளைஞர் அணி, விளையாட்டு அணி,இஸ்லாமியபிரச்சார பேரவை மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம், மருத்துவ சேவை அணிகளின் நிர்வாகிகள், தமிழ்நாடு முஸ்லிம்மகளீர்பேரவை நிர்வாகிகள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள்,வார்டுகிளை நிர்வாகிகள், பொதுமக்கள், ஜமாத் பெரியவர்கள், சமூக நல ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe