Skip to main content

அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு! நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா?

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

fgh


தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தது. அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் கால தாமதம் செய்து வருகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி!  இதனையடுத்து அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி விவாதித்தார் முதல்வர் ஸ்டாலின். காலதாமதம் செய்யும் கவர்னரின் செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் தொனியில் மென்மையான வகையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, தமிழக எம்.பி.க்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காமல் தவிர்த்து வருவது குறித்த தனது ஆதங்கத்தையும் கூட்டத்தில் வெளிப்படுத்தினார் ஸ்டாலின்.

 
இந்த நிலையில், திமுக எம்.பி. டி.ஆர் பாலு தலைமையிலான தமிழக எம்.பிக்கள் குழுவினரை 17ந் தேதி சந்திக்க நேரம் ஒதுக்கினார் அமைச்சர் அமித்ஷா. அதன்படி இந்த சந்திப்பு நேற்று (17.01.2022 ) டெல்லியில் நடந்தது. இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை அமித்ஷாவிடம் கொடுத்தார் டி.ஆர்.பாலு.  மேலும், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து ஏன் விலக்களிக்கப்பட வேண்டும் என்பது பற்றி டி.ஆர்.பாலு, வைகோ உள்ளிட்ட எம்.பி.க்கள் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அமித்ஷா, " உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தில் மாநில அரசுகளுக்கு எப்படி விலக்களிக்க முடியும்? சட்டம் என்பது பொதுவானதுதானே?" என்கிற ரீதியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு, தமிழகத்திற்கு ஏற்கனவே விலக்களிக்கப்பட்டிருக்கிற சம்பவங்களை விளக்கியிருக்கிறார் டி.ஆர்.பாலு. 


இது தவிர, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல், தனது பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசுக்கு கவர்னர் பதில் சொல்லிக்கொண்டே இருப்பது வருத்தமளிப்பதாகவும் எம்.பி.க்கள் குழு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் விலக்களிக்க முடியுமா? என்று மத்திய சுகாதார துறை அமைச்சரிடமும், கல்வி அமைச்சரிடமும் விவாதித்து விட்டு சொல்கிறேன் என்று தமிழக எம்.பி.க்களுக்கு பதில் சொல்லி அனுப்பி வைத்துள்ளார் அமித்ஷா! கரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலில் இருக்கிறது. 12 ஆம் வகுப்பிற்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடக்கவில்லை. ஜனவரியில் நடக்கவிருந்த திருப்புதல் தேர்வினையும் தள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு. ஜனவரி 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், 12 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வியை எதிரொலிக்கிறது. 


நடப்பு கல்வியாண்டில் பொது தேர்வினை எழுத வேண்டிய 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்காக அரசு தேர்வுகள் எதுவும்  இதுவரை நடத்தப்படவில்லை. இந்த சூழலில் பொது தேர்வு நடக்குமா? நடக்காதா? நடக்கவில்லை எனில் மதிப்பெண்கள் எப்படி, எதை வைத்து கணக்கிடுவார்கள் என்கிற பதடமும், அச்சமும் இப்போதே மாணவ-மாணவிகளிடம் சூழ்ந்திருக்கிறது. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீட் தேர்வு மட்டும் நடந்தால், மாணவ-மாணவிகள் எப்படி அதனை எதிர்கொள்வார்கள் ? என்ற கேள்வியை பெற்றோர்கள் எழுப்புகின்றனர்.  இப்படிப்பட்ட சூழலில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கப்படாவிட்டால் தமிழகத்தில் ஜீரணிக்க முடியாத சம்பவங்கள் தவிர்க்க முடியாததாகி விடும் என்று கவலை தெரிவிக்கிறார்கள் கல்வியாளர்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.