தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் சென்னை சைதாப்பேட்டை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மகிளா காங்கிரஸின் தலைவி சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் திருநாவுக்கரசு எம்.பி., ஜோதிமணி எம்.பி., செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் முத்தழகன் மற்றும் பொன் கிருஷ்ணமூர்த்தி, அரும்பாக்கம் வீரபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

petrol Diesel
இதையும் படியுங்கள்
Subscribe