Advertisment

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு! (படங்கள்) 

Advertisment

மூன்று நாள் பயணமாக, இன்று (07/04/2022) காலை டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டெல்லி அக்பர் சாலையில் உள்ள இல்லத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.

இது குறித்து ராஜ்பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஆளுநர் ஆர்.என்.ரவி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து, தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்பான பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (08/04/2022) பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மற்ற மத்திய அமைச்சர்களைச் சந்திக்கவுள்ள தமிழ்நாடு ஆளுநர், நாளை மறுநாள் (09/04/2022) தமிழ்நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Delhi governor Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe