Skip to main content

'நாளையே தமிழக ஆளுநர் கைது செய்யப்படலாம்' - கே.எஸ். அழகிரி பரபரப்பு 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

'Tamil Nadu governor may be arrested tomorrow'- KS Azhagiri sensation

 

இல்லாத அதிகாரத்தை மீறிச் செயல்படும் ஆளுநர் மீது வழக்கு தொடுத்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், ''மணிப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். மணிப்பூர் பாலியல் கூடமாக திகழ்ந்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகளையும் அரசே செய்கிறது. பெண்கள் கதறுகிறார்கள். அந்த மாநிலத்திற்கு சென்று பிரதமர் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அதைப்பற்றி பேசவும் இல்லை. விளக்கம் தரவும் இல்லை. தீவிரவாதிகள் ராணுவ முகாமில் நுழைந்து 7 லட்சம் துப்பாக்கிகளை திருடிச் சென்றிருக்கிறார்கள். அதைப்பற்றி உள்துறை அமைச்சர் எதுவும் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலையில் அங்கே ஒரு முதலமைச்சர் இருக்கிறார். ஆனால் அந்த மாநில அரசைக் கண்டிப்போம், கலைப்போம் என்ற வார்த்தை பாஜகவிடமிருந்து வரவில்லை. ஆனால், அதை விட்டுவிட்டு அவர்கள் தமிழகத்தைக் குறி வைக்கிறார்கள். மேற்கு வங்கத்தைக் குறி வைக்கிறார்கள். மாநில அரசு சரியில்லை என்று பேசுகிறார்கள். எவ்வளவு அப்பட்டமாக பிரதம மந்திரியும் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக இதில் தெரிந்து கொள்ள முடிகிறது.

 

மணிப்பூரில் அமைதி நிலவியது என்று சொன்னால் தான் அது சரியான வார்த்தை. விரைவில் அமைதி நிலவும் என்று சொன்னால் அங்கு அமைதி அங்கு இல்லை என்று தான் அர்த்தம். ஆறு மாத காலமாக மணிப்பூரில் அமைதி ஏற்படுத்தவில்லை என்றால், நீங்கள் எல்லாவற்றையும் முடித்து விட்டீர்கள். அங்கு எதிர்த்தரப்பு என்பதே கிடையாது. அவர்கள் வாயிழந்து போய் விட்டார்கள். மணிப்பூரை காலி செய்துவிட்டு வேறு மாநிலங்களுக்கு போய்விட்டார்கள். எனவே அங்கு இருப்பது பாஜகவின் குண்டர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். எனவே தான் விரைவில் அமைதி திரும்பும் என்று சொல்கிறார். 

 

ஆளுநர் எவ்வளவு அநாகரிகமானவர்; ஆர்எஸ்எஸ் விடவும் தீவிரமானவர் என்பதை அவருடைய வார்த்தைகள் தெளிவுபடுத்துகிறது. நீட்டை தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கவில்லை. நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அந்த தேர்வு தமிழக மாணவர்களுக்கு ஒத்து வராது. ஏனென்றால் தமிழகத்தில் இருக்கின்ற அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டம் இருக்கிறது. நீட்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேள்வி கேட்கிறார்கள். படித்தது ஒன்று ஆனால் தேர்வு மற்றொன்று என்றால் எவ்வளவு பெரிய அறிஞர்களாலும் அதில் வெற்றி பெற முடியாது. அதனால் தான் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டுமென்றால், அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் வேண்டும். அதை ஐந்தாம் வகுப்பில் இருந்து கொண்டு வர வேண்டும். 10 வருடம் கழித்து தான் இங்கு நீட் எழுதலாமே ஒழிய இப்பொழுது எழுத முடியாது.

 

ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. எல்லாக் கட்சிகளும் ஆதரித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஒரு முறைக்கு பதிலாக இரண்டு முறை அனுப்பியும் ஆளுநர் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அதற்கு அவருக்கு அதிகாரமே இல்லை. நாளை வழக்கு தொடுத்தாலும் அவர் கைது செய்யப்படுவார். தமிழகத்தில் அவர் அத்துமீறி நடந்து கொண்டார் என வழக்கு தொடர்ந்தால், கைது செய்யலாம். மாநில அரசுக்கு அந்த உரிமை இருக்கிறது. அவர் அதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.