நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான்மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த செப்.14 தேதிதூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான பின்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தமிழக அரசு மற்றும் முதல்வரை விமர்சித்து பேசியதாக அவதூறு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் சீமானை தண்டிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. விரைவில் இந்த அவதூறு வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.