Skip to main content

தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ஆய்வு

Published on 09/02/2021 | Edited on 09/02/2021
D


சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் கடந்த 58 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த 4-ந்தேதி, 58வது நாள் போராட்டத்தில் தமிழக அரசு, "மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கப்படும்" என அரசாணை வெளியிட்டது.

 

இந்த நிலையில், அரசாணை வெளியிட்டுள்ளதையொட்டி தமிழக அரசின் சுகாதாரத் துறை கல்வி இயக்குனர் நாராயணபாபு மற்றும் 15 பேர் கொண்ட குழுவினர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வுசெய்து வருகிறார்கள். இவர்கள் இன்னும் மூன்று நாட்கள் இங்கேயே தங்கி மருத்துவக் கல்லூரியை முழுவதுமாக அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளைச் சந்தித்து சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் மருத்துவமனையில் பணியாற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் மருத்துவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார். அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலை சார்பில் பழங்குடியின பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
NN

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கொல்லிமலை இணைந்து இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் பழங்குடியின பெண்களுக்கு 3 மாத இலவச கணினி பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்றது.

இந்த பயிற்சித் திட்டத்திற்கு பல்கலைக்கழக முனைவர் பாலமுருகன் வரவேற்றார். கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.புவியரசன் திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில் 'கணினிகள் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இப்பயிற்சி பழங்குடியின பெண்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்க உதவும்' எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பாலமுரளிதர். பழங்குடியின கொல்லிமலை திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ், இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், காளியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்கள். முனைவர்கள் பிரவீனா, சாய் லீலா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Annamalai University offers higher education opportunities to Scheduled Tribe students

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிராய்வு மையத்தில் பட்டியல் (இருளர்) பழங்குடி இன மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் மையம், பரங்கிப் பேட்டைப் பகுதியில் வாழும் இருளர் பழங்குடியின மக்கள் சார்ந்துள்ள நிலப்பரப்பிற்கான வளர்ச்சி சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. இம்மையத்தின் சார்பில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் சேற்று நண்டு வளர்ப்பு முறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 

இம்மையத்தால் இதுபோன்று நடத்தப்படுகின்ற பயிற்சிகளின் மூலம் கடல்சார் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதனால் அவர்களில் சிலர் கடல்சார் தொழில் முனைவோராகவும் உருவாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்து வருகின்றது. இதற்குச் சான்றாக இந்த வருடம் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் இரண்டு இருளர் பழங்குடியினர் குடும்பங்களைச் சார்ந்த மாணவிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற வாய்ப்பு பெற்றனர்.

 

அம்மாணவர்கள் B. Voc. Aquaculture துறையில் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகம் அவ்விரு மாணவர்களுக்கும் தமிழக அரசின் பழங்குடியினர் நல கல்வி உதவித் தொகையைப் பெற்றுத் தந்து அவர்கள் உயர் கல்வியைத் தொடர உதவுகின்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கதிரேசனை சந்தித்து நன்றி கூறினர்.