Advertisment

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! 

சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக்கோரும் அரசாணை எனக்கு பொருந்தாது. சில கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆகவே, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிடாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது என்று சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு பதிலளித்து சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதியிருந்த நிலையில் தமிழகஅரசு பொன்.மாணிக்கவேல் மீது உச்சநீதிதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது.

Advertisment

Tamil Nadu government contempt case against pon.manikkavel

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நியமிக்கப்பட்டிருந்தார்.

Advertisment

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நியமனத்தின் அடிப்படையிலான பொன். மாணிக்கவேலின் பதவிக் காலம்டிசம்பர் ஒன்றுடன்முடிவடைந்தது. இதனை சுட்டிக்காட்டி, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளைடிசம்பர் ஒன்றுக்குள்ஒப்படைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் கோப்புகள், விவரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் ஒப்படைக்கும் படி அரசாணை வெளியிடப்பட்டது. இது குறித்து தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக்கோரும் அரசாணை எனக்கு பொருந்தாது. சில கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆகவே, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிடாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது என்று தெரிவித்திருந்தார்பொன்.மாணிக்கவேல்.

Tamil Nadu government contempt case against pon.manikkavel

இந்நிலையில் அரசு பொறுப்பில் இல்லாத ஒருவர் அரசு ஆவணங்களை வைத்திருப்பது குற்றம் அதன்படி பொன்.மாணிக்கவேல் எந்த ஒரு அரசு பதவியிலும் இல்லாதவர்.அவருக்கான பதவிக்காலம் முடிந்துவிட்டது.பதவியில் இல்லாத ஒருவர் அரசு ஆவணங்களை வைத்திருப்பது சட்ட ரீதியில்குற்றம், இதை இல்லீகல் ஆக்டிவிட்டியாக கருதுகிறோம் என உச்சநீதிமன்றத்தில்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்திருக்கிறது. இந்த வழக்குவரும் 9 ஆம் தேதி விசரணைக்கு வர இருப்பதாக தகவல்களும் வந்துள்ளன.

Tamilnadu govt statue IG Ponmanikavel Aaivu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe