நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர் மாயம்...

Tamil Nadu fisherman missing in the middle of the sea ...

இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதியதில் தமிழ்நாடுமீனவர் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது. இந்த சம்பவத்தில் மீனவர்கள் சுகந்திரன், சேவியர் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கிய ராஜ்கிரண் என்ற மீனவரைக் காணவில்லை. அண்மையில் நாகை மாவட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில்மீனவர் ஒருவர் காணாமல் போனது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

srilanka Tamil fishermen
இதையும் படியுங்கள்
Subscribe