Skip to main content

'தொடர் மழையால் வேலையின்றி தவிப்போருக்கு நிவாரணம் வேண்டும்'- போராட்டத்திற்கு தயாராகும் தமிழ்நாடு விவசாய சங்கம்!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

 Tamil Nadu Farmers' Union prepares for 'Give relief to unemployed agricultural workers'

 

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வரும் 5-ந்தேதி நடைபெறும் விவசாயிகள் முற்றுகை போராட்டம் குறித்து இரு அமைப்பினரும் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ்  தலைமை தாங்கினார்.

 

கூட்டத்தில் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட பொருளாளர் எஸ்.தஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன், கற்பனை செல்வம் சதானந்தம், மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.கே.சரவணன் மூர்த்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் செல்லையா, மாவட்ட துணைத்தலைவர் ஜெயகுமார், இணைச் செயலாளர்கள் ரமேஷ் பாபு, கிருஷ்ணமூர்த்தி,  மாவட்ட குழு தமிழரசன், வைத்திலிங்கம், சுப்பிரமணியம், நெடுஞ்சேரலாதன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் காளி, கோவிந்தராஜன், தர்மதுரை, செல்வகுமார், கணேசன், கொளஞ்சி, முருகன், மெய்யழகன், பாண்டுரங்கன், அண்ணா துரை, கணேசன், சரவணன், அஞ்சலை, மணி, தமிழரசன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

"சம்பா சாகுபடிக்குத் தேவையான அனைத்து இடங்களிலும் காலதாமதமின்றி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும், ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் தொடர் மழையால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளைப் புனரமைக்க ஒன்றிய அரசு 6230 கோடி ரூபாயை வழங்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு 30 ஆயிரம் நெல் பயிருக்கு வழங்கிட வேண்டும், மணிலா, உளுந்து, மக்காச்சோளம், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கும் காய்கறிகள் தோட்டப் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும், மழையால் சேதமடைந்த நிலங்களைச் சரிப்படுத்த வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்த ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளைக் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட வேண்டும், கோமாரி நோயால் இறந்த கால்நடைகளைக் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட வேண்டும், அமெரிக்கப் படைபுழுவால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

 

தொடர் மழையால் வேலையின்றி தவிக்கும் விவசாயத் தொழிலாளிக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், தண்ணீர் சூழ்ந்த வீடுகளுக்கு ரூபாய் 5000 வழங்கிட வேண்டும், மாவட்டம் முழுவதும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களைச் சீர்படுத்த வேண்டும், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு, சுவர் இடிந்து உயிரிழந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.