Skip to main content

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு பொறியாளர்கள் குழு ஆய்வு! 

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Tamil Nadu Engineers team inspects Mullaiperiyaru dam

 

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டு பகுதிக்கு கூடுதல் தண்ணீர் எடுக்க தமிழ்நாடு பொறியாளர்கள் குழு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியை ஆய்வுசெய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு - கேரளா எல்லையான தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தென் தமிழ்நாட்டில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருந்துவருகிறது. தற்போது வடமேற்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நிரம்பிவருவதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது.

 

தற்போது நீர்மட்டம் 141 அடிக்கு கீழ் இருந்துவருகிறது. ஆனால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரும்போதெல்லாம் கேரளா தரப்பிலிருந்து இடைஞ்சல்கள் வருவது வழக்கமாக இருந்தது. தற்போது கேரளாவில் சிலர் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று அவதூறு செய்திகளையும் பரப்பிவருகிறார்கள். தற்போது கூட கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள செருதோணி நகரத்தில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியாக்கோஸ் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் உண்ணாவிரதமும் இருந்துவருகிறார்கள்.

 

Tamil Nadu Engineers team inspects Mullaiperiyaru dam

 

இப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும்போதெல்லாம் கேரளாவில் சிலர் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது நடைமுறையாகவும் இருந்துவருகிறது. இந்நிலையில் நேற்று (03.12.2021) தமிழ்நாடு நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி தலைமையில், மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி, பெரியார் வைகை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் ஆகியோர் கொண்ட குழு முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று அங்குள்ள மெயின் அணை, பேபி அணை மற்றும் ஷட்டர் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

 

அதோடு அணையில் 142 அடி தண்ணீர் நிலை நிறுத்துவது, தமிழ்நாட்டு பகுதிக்கு மேலும் கூடுதல் தண்ணீர் எடுப்பது தொடர்பாக தலைமதகு பகுதி குமுளி மலைப்பகுதியில் உள்ள போர்பே அணை ஆகியவற்றைப் பார்வையிட்டனர். அதோடு மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்திற்குச் சென்று அங்குள்ள பென்னிகுக் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். இதில் பெரியார் அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர்கள் ராஜகோபால், குமார், பிரவீன்குமார், பரதன், ஏனஸ்டோ, முரளிதரன் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.