காவலர்கள் தயார் நிலையில் இருக்க தமிழக டி.ஜி.பி. உத்தரவு

Tamil Nadu DGP to keep policemen ready Order!

எதிர்வரும் நாட்களில் முக்கியமான நிகழ்வுகள் இருப்பதால், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு தமிழக டி.ஜி.பி. முனைவர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி, மத தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் போன்றவை தொடர்ந்து வர உள்ளது என்று குறிப்பிட்டுள்ள டி.ஜி.பி., இதில் அரசியல் கட்சியினர், சாதி மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்கவிருப்பதால், தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாகிறது எனத் தெரிவித்துள்ளார்.

dgp order Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe