கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடுகட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பவதற்கு தேர்வு நடைபெற்றது. அதன்படி கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 மற்றம் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்வுகளும், டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி நடைபெற்ற தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மேலும் ஜனவரி மாதம் 18, 20- ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நேர்முகத்தேர்வும், அதன் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ரத்து செய்யப்படுகிறது. கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிட தேர்வு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது.