2019 நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வருகிற நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்தப்படலாம் என்கிற அரிபுரியில் தமிழக காங்கிரஸ் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக தமிழக காங்கிரசின் தலைவர் திருவுநாவுக்கரசர் மாவட்டங்கள் தோறும் கட்சியின் செயல்வீரர்கள் நிர்வாகிகளின் கூட்டத்தை நடத்தி அவர்களைத் ஆயத்தப்படுத்துகிறார்.
அதன்படி திருநாவுக்கரசர் நெல்லையிலிருந்து தனது நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தைத் தொடங்கியுள்ளார். ஒரே நாளில் நெல்லை கிழக்கு மாநகர், மற்றும் நெல்லை மேற்கு மாவட்டம் என வள்ளியூர், நெல்லை, தென்காசி மூன்று பகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டத்தினை நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் காங்கிரசில் உள்ள அனைத்து கோஷ்டிகளும், ஈகோ பார்க்காமல் கலந்து கொண்டது குறிப்பிடத்தத்தது.
ஒசையின்றி தேர்தல் வேலையைத் தொடங்கி விட்டது தமிழக காங்கிரஸ்.