வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (01.02.2023) ரயில் மூலம் வேலூர் மாவட்டத்திற்குச் செல்ல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு முதலமைச்சரை ரயில் நிலையத்திலிருந்து வழி அனுப்பி வைத்தனர்.