Advertisment

மழை சேதங்களை நேரில் ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர்! (படங்கள்)

வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை வேப்பேரி பேரக்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு இ.கா.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisment

chief minister Chennai heavy rains
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe