Skip to main content

காவிரிக்காக  தமிழக அமைச்சரவை தீர்மானம் போட வேண்டும்!-மு.தமிமுன் அன்சாரி பேட்டி!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020
Tamil Nadu Cabinet Resolution- thamimun Ansari

 

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையில் இணைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பி ல் பதாகை ஏந்தி அவரவர் வீட்டு வாசலில் 10 நிமிடம் நிற்கும் போராட்டத்தை அதன் தலைவர் பெ.மணியரசன் அறிவித்திருந்தார்.

இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி உட்பட பல அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் ஆதரவு கொடுத்திருந்தனர்.இன்று தோப்புத்துறையில் தனது வீட்டு வாசலில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பதாகை ஏந்தி முழக்கமிட்டார்.

அதே தெருவில் சமூக இடைவெளியுடன்  அவரவர் வீட்டு வாசலில் நின்றவாறு திரளானோர் காவிரி உரிமையை வலியுறுத்தி பதாகை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு காலத்தில் திட்டமிட்டு மத்திய அரசு காவிரி உரிமையை பறித்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

 

Tamil Nadu Cabinet Resolution- thamimun Ansari


காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத்தால்  அமைக்கப்பட்டது என்பதால், தமிழக அமைச்சரவை கூடி மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.காவிரி எங்களுக்கு வாழ்வாதாரம் என்றும், தமிழகத்தில் 38 மாவட்டங்களில்  20 மாவட்டங்கள் காவிரியால் பலனடைகிறது என்றும் இது தமிழகத்தின்  பொது பிரச்சனை என்றும் கூறினார்.

மஜகவினர் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில்  அவரவர் வீதிகளில், வீடுகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அறிவிக்கப்படாத பிற மாவட்டங்களிலும் கூட மஜகவினர் இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tamil Nadu Cabinet Resolution- thamimun Ansari


சீமான், வேல்முருகன்,திருமுருகன் காந்தி, தனியரசு,கருணாஸ், ஜான் பாண்டியன், இயக்குனர் கெளதமன், இயக்குனர் களஞ்சியம், சுப.உதயகுமார், பேரா. ஜெயராமன், காவிரி தனபாலன் உள்ளிட்ட தலைவர்களும் இதற்கு ஆதரவு கொடுத்ததால், களம் விறு விறுப்படைந்தது. பலதரப்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு, முகநூல் மற்றும் வலைதளங்களில் அதை பதிவிட்டு மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


        

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.