Skip to main content

தரணியெங்கும் தமிழ்ப்பால்! -வேகம் காட்டும் ஆவின்!

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
ktr

 

தமிழகத்து ஆவின் பால், நெய் மற்றும் அதன் உபபொருட்களான இனிப்பு வைகைகள்,   விற்பனைப் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டு,  சிங்கப்பூர், மலேசியா நாடுகளில், விற்பனையாகிறது. இதனைத் தொடர்ந்து, ஹாங்காங்கிலும், மஹாராஜா நிறுவனத்தைச் சேர்ந்த அருண் என்பவரை மொத்த விற்பனை முகவராக நியமித்து, ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. 

 

ஆவின் உயர் அதிகாரிகளோடு ஹாங்காங் சென்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் அறிமுக விழாவில்  “ஆவின் நிறுவனம் அம்மாவின் செல்லப்பிள்ளையாகத் திகழ்ந்தது. முதல்வர் பழனிச்சாமியும் அதுபோன்ற ஒரு அக்கறையை ஆவின் மீது காட்டி வருகிறார். அதனால்தான், மலேசியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் கால் பதித்திருக்கிறது ஆவின். முதலில், 15 நாட்களுக்கு ஒருமுறை 18000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு கண்டெய்னர்களில், டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின் பாலை,  விற்பனைக்காக ஹாங்காங் அனுப்பவிருக்கிறோம். நாடு முழுவதும் சப் டீலர்கள் நியமனம் செய்யவிருக்கிறோம். அதன்பிறகு, நிச்சயமாக ஏற்றுமதி அதிகரிக்கும். ஆவின் பொருட்களுக்கு இந்த நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அடுத்தகட்டமாக, கத்தார், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் ஆவின் விற்பனையைத் தொடங்குவோம்.” என்று கூறியிருக்கிறார். 

 

m

 

விழா முடிந்ததும், ஹாங்காங்கில் வாழும் தமிழர் ஒருவர்  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம்,   “ரகசிய போலீஸ் 115 திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும்   ‘பால் தமிழ்ப்பால்’  என்று பாடி நடித்தார்கள். உலக மொழிகளில் தமிழ் முதன்மையானது. உலகம் முழுவதும் தமிழர்கள் உள்ளனர்.  தமிழ் மட்டுமல்ல;  தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் தமிழ்ப்பாலும் (ஆவின்) சுவையானதே! ஆவின் ருசியை ஹாங்காங் நாட்டு மக்களும் உணரும் தருணம் வந்துவிட்டது” என்று சுவைபட பேசியிருக்கிறார்.  

ஹாங்காங் நாட்டின் துணைத் தூதர்கள் மற்றும் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் சிலரும் அந்த அறிமுக விழாவில் கலந்து கொண்டிருக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.