மதுரை மாவட்டத்தை சேர்ந்த சக்திராவ் என்பவர், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தும் தவறாக பயன்படுத்துவதாகக் கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (04/11/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? தமிழ் வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப்- 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாதுதமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன' எனக் கூறிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.