ஈரோடு மாவட்டத்தில் ஜி.கே.வாசனின் பிறந்த நாள் விழா நேற்று (28.12.2019) அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (28.12.2019) காலை செங்கோடம்பாளையம் என்ற பகுதியில் உள்ள கொங்கு மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான விடியல் சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு உணவு வழங்கினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இதைத் தொடர்ந்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், பிறகு பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இந்த நிகழ்வுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார்.