Skip to main content

தென்னங்கீற்று பின்னும் குடும்பத்தில் பிறந்து ஐ.ஏ.எஸ். ஆன தமிழர்!

Published on 29/04/2018 | Edited on 29/04/2018
ragu

  

இந்திய ஆட்சிப்பணிக்காண தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மாநில அளவில் 3வது இடத்தில் ஐ.ஏ.எஸ் ஆக தேர்ச்சியடைந்துள்ளார் சிவகுருபிரபாகரன் (29). இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேல ஒட்டங்காடு கிராமம். சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த பிரபாகரன் இன்று ஐ.ஏ.எஸ். ஆகி உள்ளது அந்த கிராமத்தையே உற்சாகப்படுத்தி உள்ளது.

தாய் கனகா, தந்தை மாரிமுத்து, பாட்டி நல்லம்மாள், இவர்களின் தொழில் தென்னங்கீற்று பின்னி விற்பது. அல்லது மரமில்லில் கூலிக்கு வேலை செய்வது, பால் மாடு வளர்ப்பு. இந்தக் குடும்பத்தில் பிறந்த சிவகுருபிரபாகரன் தொடக்கப்பள்ளி படிப்பை அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அருகில் உள்ள புனவாசல் கிராமத்தில் உள்ள கிருஸ்தவ அரசு உதவி பெரும் பள்ளியிலும் படித்தார். படிப்பில் சராசரி தான்.

 

 

 

 

தொடர்ந்து புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டய படிப்பு முடித்துவிட்டு பி.இ சிவில் பொறியியல் படிப்பை வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில்  படித்தார். பின்னர் எம்.டெக் சென்னை ஐ.ஐ.டியில்  படித்த இவர், தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுதினார் ரயில்வேயில் பணி கிடைத்தது. அந்த பணியே போதும் என்று அவரது உறவினர்களும், நண்பர்களும் சொன்ன போதும், என் கனவு கலெக்டர் ஆவது என்று சொல்லிவிட்டு தொடர்ந்து படித்தார், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார், இன்று மாநில அளவில் 3 வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து விடா முயற்சியால் தனது கனவை நனவாக்கி கிராமத்தையே மகிழ்ச்சியாக்கிய பிரபாகரனை அவர் படித்த பள்ளி முதல் உறவினர்கள், நண்பர்கள், கிராமத்தினர் கொண்டாடி வருகின்றனர். அவரது அம்மா கனகா, "பிரபாகரன் பிறந்தது முதல் வறுமை தான். கூலி வேலை செய்து தான் சாப்பிடனும். நாங்க கீற்று பின்னும் போது விடுமுறை நாளில் கீற்று பின்னுவான். அப்போல்லாம் 'ஒரு நாள் நானும் பெரிய அதிகாரியா வருவேன்மா' என்று சொல்வான் அதே போல இன்னைக்கு கலெக்டர் ஆகிட்டான்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளநீர் வியாபாரி தென்னை மரத்தில் அமர்ந்தவாறு மரணம்; போலீசார் விசாரணை

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
nn

ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி  கஸ்பாபேட்டை பூளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (60). இவரது மனைவி தயாளு அம்மாள். முத்துசாமி இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக அவர் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து மரத்தில் உள்ள இளநீரை அவரே வெட்டி கீழே இறக்கி நஞ்சை ஊத்துக்குளியில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் முத்துசாமி அதே ஊரில் உள்ள ஒரு தோட்டத்தில் இளநீர் பறிப்பதற்காக சென்றார். அதன் பின்பு அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது மனைவி தொலைபேசியில் அழைத்தும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் அவரது மனைவியும் இளநீர் வியாபாரம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விடுவார் என இருந்து விட்டார். இரவு ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால் தயாளு அம்மாள் உறவினர்களுடன் கணவரை தேடி தென்னந்தோப்புக்கு வந்தார்.  

தோப்பில் அவரது செருப்பும், அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் இருந்தது. அப்போது அங்குள்ள ஒரு தென்னை மரத்தின் உச்சியில் முத்துசாமி அமர்ந்தவாறு இருந்துள்ளார். இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவத்திற்கு விரைந்து வந்து மரத்தில் ஏறி முத்துசாமியை மீட்டு கீழே கொண்டு வந்தனர். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே முத்துசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமி எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கணவனின் தொடர் தொல்லை; காலை வெட்டிய மனைவி கைது

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Continued action by the husband; Arrested wife who decided in anger

 

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தினமும் மது அருந்திவிட்டு கணவன் தகராறு செய்ததால், மனைவி கணவனின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்திற்கு உட்பட்டது எருமாடு கிராமம். இந்த கிராமத்தின் பள்ளியரா எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரன் - சாரதா தம்பதியினர். இவர்களுக்கு சுஜாதா, சுனிதா, பிரியா, சிவானந்தம் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் குமரன் தினந்தோறும் மது குடித்துவிட்டு மனைவி சாரதாவிடம் தகராற்றில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

 

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்துவிட்டு மனைவியிடம் குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரதா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து கணவனின் காலை வெட்டியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை பார்த்த பொழுது கணவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். கால் பகுதியில் நரம்பு துண்டிக்கப்பட்டதால் உடலில் இருந்த ரத்தம் அனைத்தும் வெளியேறி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்த நிலையில். சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா காவல்துறையினர் உயிரிழந்த குமரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, உயிரிழப்புக்கு காரணமான மனைவி சாரதாவை கைது செய்தனர்.