Advertisment

கஸ்தூரிக்கு முன்ஜாமீன் கொடுக்க தமிழக அரசு எதிர்ப்பு 

Tamil govt opposes Kasthuri's anticipatory bail

பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. கஸ்தூரியின் பேச்சுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். கஸ்தூரியின் இந்த பேச்சு பூதாகரமான நிலையில் இது குறித்து சென்னை, மதுரை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்ததோடு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

Advertisment

எழும்பூர் போலீசார், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பேசுவது; ஜாதி, மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு மக்களிடையே கழகத்தை ஏற்படுத்துவது; அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்த ஒரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல்; அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்காக அவருக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த எழும்பூர் காவல்துறையினர் முயற்சி எடுத்தனர்.

Advertisment

அதேசமயம் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (12.11.2024) விசாரணைக்கு வந்தது. அதில் நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. கஸ்தூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூகவலைத்தளத்தில் மன்னிப்பு கொரிய பின்னரும், மன்னிப்பு கேட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர் என வாதிட்டார். காவல்துறை தரப்பில் கஸ்தூரி பேசிய வீடியோ ஒளிப்பரப்பப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட சமூக மக்களின் மாண்பைக் குலைக்கும் வகையில் கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் ஜாதியை மோதலுக்கு வழிவகுக்கும் என வாதிட்டார்.கஸ்தூரி திட்டமிட்டே இதுபோன்ற பேசி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எளிதாக மன்னிப்பு கோரிவிட்டால் புண்பட்டவர்கள் வருத்தம் சரியாகி விடாது. எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்தனர். இதுவரை ஆறு வழக்குகள் கஸ்தூரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை நீதிபதியிடம் தெரிவித்தது. கஸ்தூரி மீது எடுக்கப்படும் நடவடிக்கை ஆபாசமாக பேசும் மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கைவைத்துள்ளது.

kasthuri madurai highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe