Advertisment

ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஆறு மாதங்களுக்கு அப்போது தள்ளி வைத்தனர்.

Advertisment

f

ஆறு மாத காலக்கெடுவும் முடிவடைந்து விட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போது நடிகர் சங்க தேர்தல் 23ம் தேதி நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடக்க இருக்கிறது.

Advertisment

film
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe