Skip to main content

கேரள எல்லையில் உணவின்றி தமிழ் குடும்பங்கள் தவிப்பு!!!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
Tamil families suffer from lack of food on Kerala border

 

கற்பனையையும் தாண்டிய வேகமெடுக்கிறது கரோனாவின் ஆக்டபஸ் கொடுக்குகள். கண்ணுக்குத் தெரியாத அந்த மாயாவிக் கொடூரனை எதிர்த்து மருத்துவ உலகம் போராடி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு, ஊரடங்கிற்குள் முழுமுடக்கம், தளர்வுகள் என மேற்கொள்ளப்பட்டும், பரவல் கிராஃப் இறங்கவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ.வே.பாஸ் என்ற கட்டுப்பாட்டினிடையே மாவட்டத்திற்கு, மாவட்டம் செல்ல அந்த பாஸ் கட்டாயம் என்று மாறி மாறி அறிவிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டங்களில் பாஸ் முறை தாமதமின்றி அனுமதிக்கப்பட்டாலும், மாநிலத்திலிருந்து புலம் பெயர்பவர்களுக்கு இ.வே.பாஸ் அத்தனை சுலபமில்லை. விளைவு பிள்ளைக் குட்டிகளோடு மாநில எல்லை சாலையோரம் உணவு, உறைவிடமின்றி சுருள வேண்டியதுதான்.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா, பந்தளம், கோட்டயம் பகுதிகளில் தமிழகத்தின் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து பிழைப்பின் பொருட்டு வேலைக்குப்போன குடும்பங்கள், கரோனா ஊரடங்கு காரணமாக அங்கு வேலையில்லாமல் போனதால் சொந்தப் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அப்படி தாயகம் திரும்பிய 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு செக் போஸ்டில் இ.வே.பாஸ் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழகம் வரமுடியாமல் தவிக்கிறார்கள். ஐந்து நாட்களாக உண்ண உணவு, உடுக்க உடை, உறைவிடமின்றித் தவிப்பவர்கள் அந்தப் பகுதி சாலையோரத்தில் பாதுகாப்பின்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஊருக்குள் அனுமதிக்க தொடர் வேண்டுகோள் விடுத்தவாறிருக்கின்றனர். அவர்களுக்கு விடியல் எப்போது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.