பிரபல இயக்குனரும், நடிகருமான ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். இவர் சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பாரதியராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்த ராஜசேகர், இது ஒரு பொன்மாலை பொழுது என்ற பாடலில் நடித்து பிரபலமானார். பின்னர் தனது நண்பரான ராபர்ட்டுடன் இணைந்து பாலை வனச்சோலை, மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்லப் பேசு, தூரம் அதிகமில்லை, பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை, கல்யாணக் காலம். உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார். அந்த திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீப காலங்களில் சின்னத்திரையில் அதிக அளவில் நடித்து வந்த இவரின் இழப்பிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.