தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணை வெளியீடு!

tambaram municipallity corporation gazette notification

தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று (12/09/2021) வெளியிட்டார்.

அரசாணையில், "தாம்பரம், பம்மல், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய ஐந்து நகராட்சிகளும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை ஆகிய ஐந்து பேரூராட்சிகளும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. 15 கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கான மேல் நடவடிக்கைகள் பின்னர் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

gazette notification tambaram tn govt
இதையும் படியுங்கள்
Subscribe