Advertisment

கட்டுப்பாட்டை இழந்த பஸ்; மரத்தடியில் ஒதுங்கிய காவலருக்கு நேர்ந்த துயரம்

tambaram maduravoyal bypass police and government bus incident 

Advertisment

தாம்பரத்தில் போலீஸ் ஒருவர் மீது பேருந்து மோதி பலியான சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர்பகுதியைசேர்ந்தவர் நாகராஜன் (வயது 29). இவர் ஆதம்பாக்கம்காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம்போல்தனது வீட்டில் இருந்து பணிக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வழியில் மழை பெய்ததால்தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தடியில்மழைக்கு ஒதுக்கியுள்ளார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று ஓட்டுநரின்கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி மழைக்காகமரத்தடியில்ஒதுங்கி இருந்த நாகராஜன் மீது மோதி அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது.

இதில் படுகாயம் அடைந்த காவலர்நாகராஜன் சம்பவஇடத்திலேயே பலியானர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவுசெய்து பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் காளிதாஸ் என்பவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மழைக்காக சாலை ஓரத்தில் ஒதுங்கி நின்றவர் மீது பேருந்து மோதி பலியான சம்பவம்பொதுமக்கள் மத்திலும், காவல்துறையினர்மத்திலும் பெரும் சோகத்தையும்அதிர்ச்சியையும்ஏற்படுத்தியுள்ளது.

police maduravoyal tambaram Chengalpattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe