Skip to main content

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள்... ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதியளித்த வட்டாட்சியர்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

gk

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், செரியலூர், பனங்குளம், உள்பட பல கிராமங்களின் நீர் ஆதாரமாக உள்ளது பெரியாத்தாள் ஊரணி ஏரி. கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி ஆகிய மூன்று கிராமங்களை உள்ளடக்கி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியிலிருந்து நேரடி பாசனப் பரப்பு குறைவு என்றாலும் இந்தயில் தண்ணீர் நிரைந்தால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும். கடந்த 30, 40 ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் நிரம்பாததால் நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஏரியில் தண்ணீர் நிரப்ப குளமங்கலம் பகுதியிலும், காட்டுப்பகுதியில் உள்ள தண்ணீரும் ஏரிக்கு வர தனித்தனி வாரிகளை ஏற்படுத்தியுள்ளனர். அதே போல அம்புலி ஆறு காட்டாற்றில் வீணாக செல்லும் தண்ணீரைக் கொண்டு ஏரியை நிரப்ப மறைந்த முதலமைச்சர் காமராஜர் கொத்தமங்கலத்தில் அணை கட்டி அங்கிருந்து தண்ணீர் வர அன்னதானக் காவேரி என்ற கால்வாயையும் உருவாக்கினார். பல வருடங்களாக இந்த கால்வாய் மராமத்து இல்லாமல் காணப்பட்டது. மழைக்காலங்களில் அம்புலி ஆற்றில் தண்ணீர் செல்லும் போது சேந்தன்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இளைஞர்களும் கால்வாயை சீரமைத்து தண்ணீர் கொண்டு வர முயற்சிகள் செய்தனர்.

 

இந்த நிலையில் தான் கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதி இளைஞர்களை இணைத்து உருவாக்கப்பட்ட நீரின்றி அமையாது உலகு இளைஞர் அமைப்பினர் பொதுமக்களின உதவியோடு நீதிமன்றம் சென்று பெரியாத்தாள் ஊரணி ஏரி மற்றும் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பெற்றனர். ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள், கால்வாய் சீரமைப்பை கண்டு கொள்ளாததால் பொதுமக்களின் பங்களிப்போடு அன்னதானக்காவேரி கால்வாயை பொக்கலின் இயந்திரங்கள் உதவியுடன் சீரமைத்தனர்.

 

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த செலவில் 2 கி.மீ கால்வாயை சீரமைத்துக் கொடுத்தார். அதனால் கடந்த ஆண்டு சில நாட்கள் அம்புலி ஆறு அணைக்கட்டிலிருந்து அன்னதானக் காவேரியில் தண்ணீர் வந்தது. அதன் பிறகு கால்வாய்க்கு தெற்கு பக்கம் உள்ள தோட்டங்கள், வீடுகளுக்கு செல்வோர் ஆங்காங்கே கால்வாயில் தடுப்புகளை ஏற்படுத்தி சென்று வருகின்றனர். மேலும் சிலர் நிரந்தரமாக தடுப்புகள் ஏற்படுத்துவதை தடுக்க கால்வாயின் தென்கரையில் சாலை வசதி செய்து கொடுத்தால் தடுப்புகளை தவிர்க்கலாம் என்று முதலமைச்சர் வரை மனு அனுப்பியுள்ளனர்.

 

இந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மழைத் தண்ணீர் வந்தால் ஏரிக்கு தண்ணீர் போகாது அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நீரின்றி அமையாது உலகு அமைப்பினரும் அத்தனை அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து இன்று காலை கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் சுற்றுவட்டார கிராம இளைஞர்கள், விவசாயிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தகவலறிந்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பியுள்ளார். 

 

உண்ணாவரப் பந்தலுக்கு வந்த ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி மற்றும் வருவாய்த் துறையினர் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் போராட்டக்குழுவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தும் போது 21 நாட்களில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறினார். ஆனால் இதே போல பல முறை உறுதி அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் பொதுமக்களுக்கும் தெரியும்படி மைக்கில் சொல்ல வேண்டும் என்றனர். அதன்படி போராட்டப் பந்தலில் அமைக்கப்பட்டிருந்த மைக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி 21 நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுக்கிறோம் என்று வட்டாட்சியர் செந்தில் நாயகி உறுதியளித்து தண்ணீர் பாட்டில்களை கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். நீதிமன்ற உத்தரவில் உள்ளது போல அனைத்து நீர்வழிப்பாதைகளையும் அதிகாரிகள் சரி செய்வதே நிரந்தர தீர்வாகும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது