Skip to main content

தினகரன் அதிகமாக ஆட்டம் போடுகிறார்! சிறையில் கொந்தளித்த சசிகலா! பெங்களூரு சிறை நிலவரங்கள்!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
sasikala



செந்தில் பாலாஜி கட்சி மாறியது பற்றி சிறையில் இளவரசியிடம் பேசிய சசிகலா, தினகரனைப் பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார்.
 

''தினகரன் ரொம்ப ஓவராக ஆட்டம் போடுகிறான். அதனால்தான், செந்தில் பாலாஜி அவனை விட்டு விலகியுள்ளார். திமுகவில் சேர்ந்துள்ளார்'' என சொன்ன சசிகலா, அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். செந்தில் பாலாஜி தினகரனுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்துள்ளார். செந்தில் பாலாஜிக்கும் சேலஞ்சர் துரை என்பவருக்கும் ஆகாது. அந்த சேலஞ்சர் துரை சமீபத்தில் ஒரு டெம்போ டிராவலர் ஒன்றை தினகரனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். 

 

அந்த டெம்போ டிராவலரில் சேலஞ்சர் துரை ஏறிக்கொள்கிறார். வேறு யாரையும் அதில் ஏற அனுமதிப்பதில்லை. சமீபத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்க்க சென்ற தினகரனின் டெம்போ டிராவலரில் ஏற அந்த பகுதியில் மிகப் பிரபலமான குடவாசல் ராஜேந்திரன் முயற்சித்துள்ளார். அவரை சேலஞ்சர் துரை ஏற அனுமதிக்கவில்லை. அதனால் கடுப்பான குடவாசல் ராஜேந்திரன் மண்ணை வாரி தூற்றி சேலஞ்சர் துரையையும், தினகரனையும் திட்டியுள்ளார். 

 

தினகரனுக்காக உழைத்தவர்களையெல்லாம் இப்படி காயப்படுத்திறீங்களே? நீங்க நல்லா இருப்பீங்களா? என்று குடவாசல் ரஜேந்திரன் சாபமிட்டது சசிகலாவின் காதுகளுக்கு சென்றுள்ளது. இந்த சம்பவத்தைச் சொல்லி வருத்தப்பட்ட சசிகலா, தினகரன் ஆட்டம் ஓவராக இருக்கிறது என்று தனது கோபத்தை பதிவு செய்துள்ளார். 

 

அத்துடன் இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோரையும் தினகரன் மதிப்பதில்லை என இளவரசியும் தன் பங்குக்கு தினகரன் பற்றி கோபப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கும், துணைப் பொதுச்செயலாளரான தினகரனுக்கும் இடையே ஒரு பெரிய பணிப்போர் நிலவுவதாக அமமுக வட்டாரங்களும், பெங்களுரு சிறை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.