கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவனைபோலீசார் கைது செய்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்த கைதுக்குப் பிறகு சந்தோஷ்குமாரிடம்நடத்தப்பட்ட விசாரணையில் அவன் தான்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தேன் என ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.
கோவை துடியலூரில் சிறுமிவன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், துடியலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. மேலும் கோயம்புத்தூர் எஸ்பி உத்தரவின் பேரில் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்த வழக்கில் போலீசார் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் எந்த துல்லியமான ஆதாரங்களும்இந்த வழக்கில் கிடைக்காமல் திணறியபோலீசார் இன்று காலை கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவனை கைது செய்தனர்.
சம்பவம் நடந்த அன்று சிறுமியின் வீட்டின் அருகில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த சந்தோஷ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. அந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டபோதுஅந்த சிறுமிமீது போடப்பட்டிருந்த டி-ஷர்ட்டும் அவனுடையதுதான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரணையில் தான் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் அவருடைய மனைவியை பிரிந்து புலியுமுத்தூர்பகுதியில் வசித்து வந்திருக்கிறான்.அவ்வப்போது அவனது பாட்டி வீடான கஸ்தூரிநாயக்கன்பாளையம் புதூருக்கு வந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சிறுமி காணாமல் போன அன்றுசந்தோஷ்குமார் சம்பவ இடத்தில் இருந்ததற்கான ஆதாரமாக அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் அவனது செல்போன் எண்பதிவாகியிருந்தது.இதனை அடுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தோஷ்குமார் சிறுமி மீது போடப்பட்டிருந்த டீசர்ட் தன்னுடைய தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.