Advertisment

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நடைபெற உள்ள தேர்தலையொட்டி வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று சென்னை முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சென்னை அரும்பாக்கம் கோலப்பெருமாள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் சின்னம் பொருத்தும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சியிலும் வாக்கு இயந்திரத்தில் சின்னங்கள் ஒட்டும் பணி நடைபெற்றது.