Advertisment

"அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" - டி.ஜி.பி. சைலேந்திர பாபு 

sylendra babu

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி பழகி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதை தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் பதிவுசெய்துள்ளார். பின், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, தன்னுடைய நண்பர்களுடனும் நெருக்கமாக இருக்கும்படி அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார். திமுகவைச் சேர்ந்த ஹரிஹரன், ஜீனைத் அகமது, நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 8 பேர் அந்த மாணவியை கடந்த ஆறு மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

Advertisment

அந்த இளம்பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, 8 பேரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் புலன்விசாரணையானது காவல்துறை துணை கண்காணிப்பாளர் அர்ச்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisment

DGPsylendrababu Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe