Skip to main content

முன்னாள் அமைச்சருக்கு பன்றி காய்ச்சல்... மருத்துவமனையில் அனுமதி!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

இந்தியாவில் ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ளது. 2019ம் ஆண்டில் இதுவரை, அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், 2,266 பேர் பாதிக்கப்பட்டு, 239 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில், 208; குஜராத்தில், 151 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

swine flu symptoms on Ex-Minsiter

 

தமிழகத்தில் இதுவரை 542 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 5 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள்.

 

நாடு முழுவதும், 28,050 பேர் பாதிக்கப்பட்டதில், 1,201 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. பன்றி காய்ச்சல் தடுப்புக்கு, தடுப்பூசி மற்றும் மருந்துகள் இருந்தாலும், ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறாததே இறப்புக்கு காரணம் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பலியான மன்னார்குடி பெண் உடலை குடும்பத்தினரிடம் நிர்வாகம் தர மறுத்தது. மாநகராட்சி சார்பில் உடல் தகனம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அண்டோரா தெருவை சேர்ந்தவர் டெய்லர் முருகானந்தம். இவரது மனைவி கலாவதி (47). கடந்த 15 நாட்களுக்கு முன் திருச்சியில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட கலாவதிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த அவருக்கு, மன்னார்குடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் திருச்சியில் உள்ள கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.

 

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் வார்டில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 19.11.2019 அதிகாலை கலாவதி இறந்தார். அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக, தொற்று ஏற்படாமல் தடுக்க, வார்டில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில் இறுதிசடங்கு செய்ய கலாவதியின் உடலை தரும்படி உறவினர்கள் கேட்டனர். ஆனால் தொற்று நோய் பரவும் என்பதால் உடலை தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து திருச்சி ஓயாமரி மின்மயானத்தில் கலாவதி உடல் மாநகராட்சி சார்பில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து டீன் வனிதா கூறுகையில், "பன்றி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட கலாவதி, 2 தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முடியாமல் இங்கு வந்தார். முதலிலேயே வந்திருந்தால் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றி இருக்கலாம்" என்றார்.

 

இதற்கு இடையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சீனியர் அமைச்சருக்கும் முக்கிய பிரமுகருமான ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களுர் சென்று திரும்பி நிலையில் தீடீர் காய்ச்சல் காரணமாக திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபட்டுள்ளார். முதல் கட்டமாக அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசயம் கேள்விப்பட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் அவரை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.