Advertisment

சுவாமி விவேகானந்தர் பேசிய பஞ்ச் டயலாக்- விவேக் 

‘இஸ்ரோவும், இந்திய அறிவியல் நிறுவனமும் அமைய முக்கிய காரணமாக இருந்தவர் சுவாமி விவேகானந்தர்.

Advertisment

சுவாமி விவேகானந்தர் ஒரு சூப்பர் ஸ்டார்’ என்று கூறினார்.

விவேகானந்தரின் 156வது பிறந்தநாள் விழா, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய நடிகர் விவேக், சகோதர சகோதரிகளே என்று விவேகானந்தர் சொல்லியதுதான் முதல் பஞ்ச் டயலாக் என்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Advertisment

அதில் பேசிய விவேக், “விவேகானந்தர் சிகாகோவில் பேசியபோது சகோதர்களே, சகோதரிகளே என்று தொடங்கினார். அதைவிட சிறந்த பஞ்ச் டயலாக் உண்டா?. அந்த விழாவே அனைவருக்குமானதாக இருந்தது, அந்த விழாவில் இவ்வாறு பேசி அங்கு சூப்பர் ஸ்டாரானார் விவேகானந்தர் என்று கூறினார். இதனையடுத்து விவேக் விழாவில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு சில அறிவுரைகளும் கூறினார்.

vivek vivekananda
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe