Skip to main content

சுவாமி சகஜானந்தா 59-வது குருபூஜை விழா.

Published on 01/05/2018 | Edited on 02/05/2018


 

sagaja

 

ஏழை எளிய மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற அரிய நோக்கில் சிதம்பரம் பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னே நந்தனார் கல்வி கழகத்தை நிறுவியவர் சுவாமி சகஜானந்தா. இவரது கல்விபணியை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இடத்தில் தமிழக அரசு 1 கோடியே 25 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டிகொடுத்துள்ளது.

 

சுவாமியின் 59 வது குருபூஜை விழா அவர் மறைந்த இடமான ஓமக்குளத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு நந்தனார் கல்விக்கழக தலைவர் மருத்துவர் சங்கரன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கல்விக்கழக உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். பள்ளியில் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் காலை முதல் மாலை வரை சுவாமியின் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து நந்தனார் ஆண்கள் பள்ளியின் அருகே அமைக்கப்பட்டுள்ள அவரது மணிமண்டபத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்கள். 

 

பின்னர் அனைவரும் அவரது சிலையின் முன் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். கல்விக்கழக உறுப்பினர்கள் வினோபா, இளைய அன்பழகன்,மணிவேல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் விமலகுமார்,பன்னீர்செல்வம், தேமுதிக கட்சி சார்பில் உமாநாத், சகஜானந்தா சமூக பேரவை சார்பில் நீதிவளவன், திருவரசு. மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மாதவன்,நகரசெயலாளர் ராஜா. தமிழ்மாநில காங்கிரஸ் பாலமுருகன்,பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அம்பிகாபதி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் சுவாயின் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் மணிமண்டபத்திலிருந்து ஊர்வலமாக வந்து ஓமக்குளத்திலுள்ள அவரது மறைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடகா சாமியாரின் சங்கு பூஜை; திருவண்ணாமலையில் சர்ச்சை

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

Sangu Pooja of the Karnataka preacher who created the controversy

 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் சித்திரை 1 ஆம் தேதியை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்காக ஆந்திரா மற்றும் திருவண்ணாமலை சேர்ந்த பசி பவுண்டேஷன் மற்றும் வஜ்ர வராகி பீடம் என்ற இந்து மத அமைப்பு சங்கு ஊதி உலக சாதனை படைக்க முடிவு செய்தது. ஒரே நேரத்தில் 1008 நபர்கள் சங்குகளை தொடர்ந்து 15 வினாடிகளுக்கு ஒருமுறை என மூன்று முறை சங்குகளை முழங்குவது உலக சாதனை முயற்சியாக இருந்தது. அதனை முறியடிக்க 1039 நபர்கள் தொடர்ந்து 26.2 வினாடிகள் சங்குகளை ஊதி உலக சாதனை நிகழ்வுகளை நிகழ்த்தினார்கள்.

 

இந்த உலக சாதனை நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்னியாசிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சங்கு வழங்கப்பட்டு இந்த உலக சாதனைக்காக சங்கு ஊதப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம், கடவுள் வேடமணிந்து பலருடைய நடனம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இதற்காக கல்லூரி வளாகத்தில் காவி கொடி ஏற்றி, மேடை அமைத்து அதகளம் செய்து இருந்தனர்.

 

Sangu Pooja of the Karnataka preacher who created the controversy

 

உலக சாதனை என்கிற பெயரில் ஆன்மீக அமைப்பு ஒன்று இப்படியொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இந்து கொள்கையை பரப்பியுள்ளனர். இதற்கு அரசு கல்வி நிறுவனம் எப்படி அனுமதி வழங்கலாம் என சி.பி.எம் உட்பட சமூக நல ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதேபோல் வேறு மத அமைப்புகள், அரசியல் கட்சிகள், பகுத்தறிவு இயக்கங்கள் அனுமதி கேட்டால் கல்லூரி நிர்வாகம் அனுமதி தருமா என்கிற கேள்வியை எழுப்பினர்.

 

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பசி பவுண்டேஷன் மற்றும் வஜ்ர வராகி பீடம் என்ற அமைப்பு. இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் ஆதரவாக இருந்தார்கள் அவர்கள்தான் அரசு கல்லூரிக்குள் அனுமதி தரவைத்தார்கள் என குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய கல்லூரி முதல்வர் உட்பட சம்மந்தப்பட்ட அனைவரும் அமைதியாகவே உள்ளார்கள்.

 

Next Story

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6 ஆம் ஆண்டு துவக்க விழா (படங்கள்) 

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியின் கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.