Skip to main content

பேரனின் பிறந்தநாள் விழாவுக்கு பத்திரிக்கை கொடுக்க போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் எஸ்.வி.சேகர்!

Published on 13/06/2018 | Edited on 13/06/2018
sv


தலைமறைவாக உள்ள எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறையினர் தேடிவருவதாக கூறப்படும் நிலையில், அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பேரனின் பிறந்தநாளுக்கு பத்திரிக்கை கொடுத்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்தை சமூகவலைதளத்தில் பதிவு செய்த பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர், பின்னர் அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் அதனை நீக்கிவிட்டார். இந்நிலையில் அவரது கருத்துகள் பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பத்திரிகையாளர் சங்கங்கள் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தன. இதனால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என அஞ்சிய அவர் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. மேலும் அவரை கைது செய்ய எவ்வீத தடையும் இல்லை என்றும் கூறியது.
 

sv

 

 

 

இந்தநிலையில், சென்னையில் எஸ்.வி.சேகரின் பேரனுக்கு நாளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளதாகவும், இதற்காக அவரது வீட்டில் பெரிய அளவில் தயாரிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கான வேலைகளில் நேற்றில் இருந்து தீவிரமாக ஈடுபட்டு வரும் எஸ்.வி.சேகர் சில முக்கிய பாஜக பிரபலங்கள், சில ஆளும் கட்சி பிரபலங்கள், சினிமா நண்பர்கள், உள்ளிட்டோருக்கு இதற்காக பத்திரிக்கை கொடுத்து வருகிறார்.

பொதுமக்களிடம் தனக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட அவர், உயர்அதிகாரியான உறவினரின் செல்வாக்கை பயன்படுத்தி துப்பாக்கி ஏந்திய போலீசாரை அழைத்து கொண்டு மிக சாதாரணமாக சுற்றி வருகிறார். நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு அவர் நிதானாமாக சென்றுள்ளார். அப்போது சுற்றி இருந்தவர்கள் அவரை மறைந்து இருந்து போட்டோ எடுக்க அவரோ, போட்டோ தானே.. தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி போஸ் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த ஒரு சிலர் அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். பின்னர் உணவகத்தில் இருந்து கிளம்பிய அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் இன்னோவா கார் கதவை திறந்து விட காரில் ஏறி கூலாக செல்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.