பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தி பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் எஸ்.வி.சேகர் உருவப்படத்தை எரித்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தியாக.இளையராஜா தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டு எஸ்.வி.சேகர் உருவபடத்தை எரித்து, எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பினர்.