Skip to main content

நடத்தையில் சந்தேகம் - சகோதரியை கொன்ற தம்பி

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
Sister killing



நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சகோதரியை கம்பியால் தாக்கி கொலை செய்து தம்பி தலைமறைவானார். 
 

தேனி மாவட்டம், கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், மரகதம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும், செல்வக்குமார் என்ற மகனும் உள்ளனர். செல்வக்குமார் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். விடுமுறையின்போது ஊருக்கு வருவார். ஜெயந்தி மாலாவுக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது. 
 

கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார் மரகதம். கணவரை பிரிந்து இங்கு வந்து தங்கியிருக்கும் மரகதத்தின் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர் செல்வக்குமாருக்கு தெரிவித்துள்ளனர்.
 

இதையடுத்து 10 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார் செல்வக்குமார். அப்போது வீட்டில் மரகதத்திடம், செல்வக்குமார் மற்றும் அவரது பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 

வாக்குவாத்தின்போது எரிச்சலடைந்த செல்வக்குமாரும், அவரது பெற்றோரும் அருகில் இருந்த கத்தியை எடுத்து மரகதத்தை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மரகதம் உயிரிழந்தார். 
 

சம்பவம் நடந்தவுடன் செல்வக்கமார் அந்த இடத்தில் இருந்து தப்பினார். கொலை சம்பவம் குறித்து அறிந்த வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையா மற்றும் பேச்சியம்மாளை கைது செய்தனர். தப்பி ஓடிய செல்வக்குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கண்ணில் அன்பைச் சொல்வாளே…’ - இறப்பிலும் ஒன்றிணைந்த அக்கா, தம்பி!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Sister and brother passed away in Vaniyambadi

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவருக்கு 104. இவரது உடன் பிறந்த தம்பி துரைசாமி. இவருக்கு 102 வயதாகிறது. இருவரும் பாசத்தோடு வளர்ந்துள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகளோடு வாழ்ந்து வந்தனர். வள்ளியம்மாளின் கணவர் சின்னக்கண்ணு  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 103 வயதில் இறந்துள்ளார். பின்னர் தனது இரண்டு மகன்கள், நான்கு  மகள்களுடனும் வாழ்ந்து வந்தார். 

 

இதேபோல் துரைசாமிக்கு கண்ணம்மாள் (89) என்ற மனைவியும், நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் என மகன், பேரன், கொள்ளுப்பேரன் என நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அக்கா, தம்பி இருவரும் ஒரே ஊரில் பக்கத்துப் பக்கத்து தெருவில் தத்தமது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நவம்பர் 20 ஆம் தேதி மாலை 5 மணியளவில் வள்ளியம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பக்கத்து தெருவில் இருந்த வள்ளியம்மாள் தம்பி துரைசாமி உட்பட உறவினர்களுக்கு தகவல் சொல்லியுள்ளனர். 

 

தனது அக்காவின்  இறப்பு தகவல் அறிந்த  அவரது தம்பி துரைசாமி தனது அக்கா உடல் அருகே சென்று அமர்ந்து கொண்டவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக கண்ணீரோடு அமர்ந்து இருந்துள்ளார். அடுத்த 7 மணி நேரத்தில் திடீரென துரைசாமியும் உயிரிழந்துள்ளார். இது அங்கிருந்த அனைவரின் துக்கத்தையும் அதிகரித்தது. 

 

அக்கா, தம்பி இருவரும் 100 வயதை கடந்து நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். அக்கா, தம்பி இருவரின் மரணத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் திரளாக சென்று அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் வைத்து இறுதிச் சடங்கு செய்து பின்னர் இருவரது சடலங்களையும் ஒன்றாக எடுத்துச் சென்று அருகே உள்ள மயானத்தில் இறுதி சடங்கு செய்தனர்.

 

 

Next Story

மின்சாரம் தாக்கி அக்கா, தம்பி பலி; தமிழக அரசு நிதியுதவி

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Sister, brother incident by electrocution Funded by Tamil Nadu Govt

 

திண்டுக்கல் மாவட்டத்தில் மின் கசிவின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமி மற்றும் சிறுவனின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து  தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொம்பேரிபட்டி கிராமம், மம்மானியூரில் நேற்று முன்தினம் (05.11.2023) மாலை சுமார் 06:30 மணியளவில் சுந்தரம் என்பவரின் மகன் குமார் (வயது 6) என்ற சிறுவன் அவருடைய வீட்டில் தகரத்தினால் செய்யப்பட்டிருந்த கதவை திறக்க முயன்ற போது மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. அப்போது விபத்திலிருந்து அச்சிறுவனை காப்பாற்ற முற்பட்ட சிறுவனின் அக்கா சு.அழகுமீனா (வயது 16) என்ற சிறுமியும், சிறுவனும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்து விட்டனர்.

 

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்ப சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கருணை அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.