Skip to main content

சர்ச்சையை கிளப்பிய சஸ்பென்ட். - போன் எடுக்காதது ஒரு தப்பா?

Published on 06/01/2019 | Edited on 06/01/2019

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி ஆணையாளராக இருப்பவர் பார்த்தசாரதி. நீண்ட மாதங்களாக இந்த நகராட்சியின் ஆணையர் பதவி என்பது காலியாகவே இருந்துவந்தது. சில மாதங்களுக்கு முன்பு தான் நாமக்கல்லில் இருந்து பார்த்தசாரதி என்பவர் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

 

suspend

 

தினமும் காலை 8 மணிக்கெல்லாம் ஒவ்வொரு தெருவாக சென்று துப்புரவு பணியாளர்கள் சரியாக வேலை செய்துள்ளார்களா என ஆய்வு செய்ய தொடங்கிவிடுவார். அதேப்போல் தண்ணீர் வராத தெருக்கள் எது, மின்விளக்கு எரியாத தெரு எது என பார்த்துவிட்டு நகராட்சி பணியாளர்களை கொண்டு அந்த பணியை செய்வார். இதனால் பொதுமக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இருந்துவந்தது. பணியிலும் நேர்மையாக இருந்தார் என்கிறார்கள் இந்நகராட்சியின் அதிகாரிகள்.

 


இந்நிலையில் தான், மேல்அதிகாரிகளுக்கு மரியாதை தராததால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார் என வேலூர் மண்டல நகராட்சி இயக்குநர் விஜயகுமார் அறிவித்துள்ளார். இது சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுப்பற்றி நாம் விசாரித்தபோது, கடந்த வாரம் பார்த்தசாரதி, இரண்டு நாள் விடுமுறை கடிதத்தை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு ஊருக்கு சென்றுள்ளார். விடுமுறையில் இருந்தபோது விஜயகுமார் போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்கவில்லை. இதுதொடர்பாக நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பார்த்தசாரதியை ஒருமையில் திட்டியுள்ளார் விஜயகுமார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டபோது, உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன் என விஜயகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்தே சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள்.

 


அதோடு, விடுமுறை என்பது ஒரு ஊழியரின் அடிப்படை உரிமை. விடுமுறை கடிதம் அளிக்காமலே விடுமுறை எடுத்துக்கொண்டு பின்னர் கடிதம் தரலாம் என்கிறது விதிமுறை. அவர் மின்னஞ்சலில் விடுமுறை கடிதத்தை அனுப்பிவிட்டே சென்றுள்ளார். விடுமுறை தினத்தின் மேலதிகாரிகள் அழைத்தால் போனை எடுக்கவேண்டும் என்கிற கட்டாயம்மில்லை. போன் ஏன் எடுக்கவில்லை எனக்கேட்டபோது, குடும்ப பிரச்சனை காரணமாக விடுமுறை போட்டுவிட்டு சென்றேன், அங்கு செல்போனை சைலண்ட்டில் போட்டுயிருந்தேன், அதனால் கவனிக்கவில்லை என விளக்கம் தந்துள்ளார், அதை ஏற்றுக்கொள்ளாமல் அனைவர் முன்னிலையிலும் ஒருமையில் பேசியது சரியில்லை என்கிறார்கள்.

 


ஆம்பூர் அரசியல் பிரமுகர் ஒருவர் நம்மிடம், ஆம்பூர் நகராட்சி அலுவலகம் அதிமுக பிரமுகர் ஒருவரின் குடும்ப கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. அந்த பிரமுகர் மற்றும் அவர் தரப்பின் சில கோரிக்கைகைள ஆணையாளர் கேட்கவில்லை. இதுப்பற்றி அமைச்சர் வீரமணியிடம் அந்த பிரமுகர் முறையிட்டார். ஆணையர் நேர்மையாக எதையும் அணுகுபவர் என்பதால் அதிகாரிகள் வழியாக வந்த சிபாரிசுகளையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை. அதற்கு பழிவாங்கவே மேல்அதிகாரிகளை மதிக்கவில்லை எனச்சொல்லி சஸ்பென்ட் செய்துயிருப்பார்கள் என நினைக்கிறோம் என்கிறார்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Action against special police assistant inspectors who joined BJP!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.  

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ அண்ணாமலை பங்கேற்ற நடைப்பயணம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் காவல் சீருடையில் இருந்துகொண்டே பா.ஜ.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. 

இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி தஞ்சை சரக டிஐஜிக்கு அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தஞ்சை சரக டிஐஜி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 

Next Story

2 ஆசிரியர்கள் மாயமான வழக்கில் அலட்சியம்; எஸ்.எஸ்.ஐ 2 பேர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
2 Authors are mysterious case; Action against 2 SSIs

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவருக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவி உள்ளார். வெங்கடேசன், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிபுரிந்து வந்த அதே பள்ளியில், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தீபா (42) என்ற கணித ஆசிரியரும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 15ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற வெங்கடேசனும், தீபாவும், மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதில் பதற்றமடைந்த வெங்கடேசனின் மனைவி காயத்ரி, இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே போல், தீபாவின் கணவரான பாலமுருகன் வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கோவை நகரில் நின்ற தீபாவின் காரை காவல்துறையினர் கண்டுபிடித்து சோதனை நடத்தினர். 

அந்த சோதனையில், தீபாவின் தாலி, 2 குண்டு, தீபா மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், ரத்தக்கறை படிந்த சுத்தியல், அரிவாள் போன்ற ஆயுதங்களை கைப்பற்றினர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். ஆனால், ஆசிரியர்கள் 2 பேரை பற்றி எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. 

இதனிடையே, குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசனின் உறவினர்கள் சிலர் தேனிக்கு சென்று வெங்கடேசனை கண்டுபிடித்து அவரது சொந்த ஊரான குரும்பலூருக்கு அழைத்து வந்து பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியனுக்கு ரகசியமாக தகவல் கொடுத்து குரும்பலூருக்கு வருமாறு கூறினர். ஆனால், எஸ்.எஸ்.ஐ பாண்டியன் அவர்களிடம் மறுநாள் ஸ்டேசனுக்கு வெங்கடேசனை அழைத்து வரும்படி அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த வெங்கடேசன் குரும்பலூரில் இருந்து தப்பி சென்றுள்ளார். அதே போல், தீபாவின் கணவர் வி.களத்தூர் போலீஸ் ஸ்டேசனில் கடந்த மாதம் 18ஆம் தேதி புகார் கொடுத்தும், வி.களத்தூர் எஸ்.எஸ்.ஐ முஹமது ஜியாவுதீன் வழக்குப்பதிவு மட்டும் செய்துவிட்டு தேடும் பணியை துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருந்துள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி கவனத்துக்கு தனிப்படை போலீசார் கொண்டு சென்றனர். இதையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்ததாக பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியன், வி.களத்தூர் எஸ்.எஸ்.ஐ முஹமது ஜியாவுதீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.ஷ்யாம்ளாதேவி அதிரடியாக நேற்று (21-12-23) உத்தரவிட்டார்.