Skip to main content

மகனின் மரணத்தில் சந்தேகமடைந்த தந்தை... நண்பர்களை தீவிர விசாரணை செய்துவரும் காவல்துறையினர்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

Suspected father in son's death ... Police are conducting a serious investigation into friends

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைப் பிள்ளை. இவரது மகன் ஆனந்தராஜ், வயது 24. இவர், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பிரகாஷ், அபி, மகேந்திரன், ஆகாஷ் ஆகியோருடன் மலைக்கோட்டாலம் அருகே ஓடும் கோமுகி ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ், ஆற்றில் மூழ்கிய நிலையில் இறந்துகிடந்துள்ளார். இந்தத் தகவல் அவரது தந்தைக்குத் தெரியவந்தது. உடனடியாக உறவினர்களை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தராஜ் உடலை ஆற்றுத் தண்ணீரிலிருந்து மீட்டனர். இதுகுறித்து உடனடியாக வரஞ்சரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராஜலட்சுமி, வரஞ்சரம் சப் - இன்ஸ்பெக்டர் பாரதி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்றனர்.

 

பின்னர் ஆனந்தராஜ் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மகனுடன் சென்ற அவரது நண்பர்கள் பிரகாஷ், அபி ஆகியோர் குடிபோதையில் இருந்துள்ளனர். அதனால் இவர்கள் குடிபோதையில் இருக்கும்போது அவர்களுக்குள் ஏதாவது தகராறு ஏற்பட்டு அதில் என் மகன் மீது தாக்குதல் நடத்தியதால் அவர் இறந்திருக்கலாம். எனவே இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், வழக்குப் பதிவுசெய்து சந்தேகத்தின் பெயரில் ஆனந்தராஜ் நண்பர்களான பிரகாஷ், அபி, ஆகாஷ், மகேந்திரன் ஆகிய 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

 

நண்பர்களுடன் சென்று மது பார்ட்டியில் கலந்துகொண்டதில் அவர்களுக்குள் போதை அதிகமாகி ஏற்பட்ட தகராறில் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது மதுபோதையில் குளிக்கச் செல்லும்போது ஆற்றுத் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம்... இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இறப்புக்கான காரணம் பிரேதப் பரிசோதனையில் தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நண்பர்களுடன் சென்ற இளைஞர், உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.