அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை பற்றியும், இன்றைய அரசுப்பள்ளி மாணவர்கள் நிலைகுறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சூர்யாவின் இந்த பேச்சு வன்முறையைதூண்டுகிறது. புதிய கல்விகொள்கையை விமர்சித்து பேசியிருக்கும் நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இந்தி படிக்க கூடாது எனக் கூறும் திமுகவினரின் வீடுகள் முன் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.